காரியாலய பிரிவு
வியாபாரம் ஒன்றை பதிவு செய்யும் போது உரிமையாளரே வர வேண்டுமா?
- இதற்காக உரிமையாளர்' கட்டாயம் வர வேண்டியதுடன் தேசிய அடையாள அட்டை கொண்டு வருவது அவசியமாகும்
மரணித்த ஒருவரின் வங்கி கணக்கிலுள்ள பணம் மற்றும் அடகு செய்யப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பாக கொண்டுவரவேண்டிய ஆவணங்கள் எவை?
- மரணித்தவரின் மரண சான்றிதழ்.
- விண்ணப்பதாரிக்கு உள்ள உறவுமுறைக்கான சான்று (பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ்).
- வேறு நபர்கள் இருப்பார்களாயின் விண்ணப்பதாரி பணம் மற்றும் பொருட்களை பெற்றுக்கொள்வதில் ஆட்சேபனை இல்லை என சத்திய பிரமாணம்.
- தேசிய அடையாள அட்டை.
சமூக சேவைகள் பிரிவு
கர்ப்பிணி தாய்மாருக்கு வழங்கப்படும் 20000.00 ரூபா பெறுமதியான போசாக்கு கொடுப்பணவை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- கர்ப்பம் அடைந்து 3 மாதங்களுக்குள் செல்லும் வைத்திய நிலையம் அமைந்திருக்கும் பிரதேச செயலகத்தின் குழந்தைகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தரிடம் அல்லது வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தரிடம் இவ்விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
கல்விக்கொடைகளை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- பிள்ளையின் தந்தை மரணமடைந்தோ அல்லது சுகப்படுத்த முடியாத நோயிலிருந்தாலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கல்விக்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
அரசு அல்லாத நிறுவனம் ஒன்றை பதிவு செய்வது எவ்வாறு?
- அரசு அல்லாத நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு பின் ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பதிவு செய்யப்படும்.
புதிதாக சமுர்தி கொடுப்பணவு பெற்றுக்கொள்ள முடியுமா?
- தற்போது புதிதாக பயனாளிகள் தெரிவு செய்யப்படமாட்டார்கள், வரும் காலத்தில் கருத்தில் கொள்வதற்காக பெற்றுக்கொள்ளப்படும்.
மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு
பிறப்பு , இறப்பு மற்றும் மரண சான்றிதழ் பிரதிகளை பெற்றுக்கொள்வது எவ்வாறு?
- பிறப்பு , இறப்பு மற்றும் மரண சான்றிதழின் இலக்கம் தெரிந்திருப்பின் 100 ரூபாயும்
- பிறப்பு , இறப்பு மற்றும் மரண சான்றிதழின் இலக்கம் தெரியாதிருப்பின் 200 ரூபாயும் பிரதேச செயலகத்திற்கு செலுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.
- பதுளை மாவட்டத்தில் நடைபெற்ற பிறப்பு , இறப்பு மற்றும் மரணமாக இருப்பின் மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
பிறப்பு ஒன்றை பதிவு செய்வது எவ்வாறு?
- சாதாரன பிறப்பாக இருப்பின் பிறந்து 3 மாதங்களுக்குள் உரிய பிரதேசத்தில் பிறப்பை பதிவு செய்யும் பதிவாளர் ஒருவரிடம் பதிவு செய்ய வேண்டும்.
- பிறப்பு நடைபெற்று 03 மாதங்கள் பிந்தியிருந்தால் மேலதிக மாவட்ட செயலாளரை சந்தித்து தேவையான தகவல்களை பெற முடியும்.
ஓய்வூதிய பிரிவு
சிவில் ஓய்வூதியர் மரணமடைந்தால் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம் செய்துக்கொள்வது எவ்வாறு
- முதலில் ஓய்வூதியரின் மரண சான்றிதழை பெற்றுக்கொண்டு ஓய்வூதியத்தை நிறுத்துதல்.
- கூடுதலாக ஓய்வூதியம் வழங்கப்பட்டிருக்குமாயின் அதை மீள பெறுவதற்கு வங்கிக்கு கடிதம் அனுப்புதல்.
- பிறகு குறித்த நபருக்கு பின்வரும் ஆவணங்களை கொண்டுவர கூறுதல்.
- ஓய்வூதியரின் மரண சான்றிதழின் மூலப்பிரதி.
- கணவன் அல்லது மனைவியின் பிறப்பு சான்றிதழின் மூலப்பிரதி
- திருமண சான்றிதழின் மூலப்பிரதி
- கணவன் அல்லது மனைவியின் வங்கி புத்தகத்தின் பிரதி
- கணவன் அல்லது மனைவியின் அடையாள அட்டை பிரதி
- விதவைகள் அநாதைகள் அட்டையினி பிரதி அல்லது விதவைகள் அநாதைகள் இலக்கம்.
- கிராம உத்தியோகத்தரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டு பிரமாண நிற புகைப்படம்.
- மேற்குறிப்பிட்ட அனைத்து பிரதிகளையும் கிராம உத்தியோகத்தர் அத்தாட்சிப்படுத்த வேண்டும்.
- பிறகு எல்லா தகவல்களும் கிடைத்த பின் கோவையை விதவைகள் அநாதைகள் ஓய்வூதியம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓய்வூதியரின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டிருப்பது ஏன்?
- குறித்த வருடத்திற்கான உயிர் வாழ்வதற்கான சான்றிதழ் இல்லாமல் இருப்பின்.
- ஓய்வூதியர் இருப்பாராயின் உயிர் வாழ்வதற்கான சான்றிதழ் வழங்கி கிராம உத்தியோகத்தரால் சான்றுப்படுத்தி கொண்டுவர கூறுதல்.
- உயிர் வாழ்வதற்கான சான்றிதழ் கிடைத்த பின் மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும்.

















